Latestஉலகம்

காஷ்மீர் தாக்குதலுக்குப் பழிவாங்கல்; பாகிஸ்தானில் 70 பயங்கரவாதிகளைக் கொன்ற இந்தியா

புது டெல்லி, மே-7- ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் இந்தியா மொத்தமாக 24 ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்ட அத்தாக்குதல்களில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

Lashkar-e-Taiba, Jaish-e-Mohammad ஆகிய 2 பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளும் அடவர்களில் அடங்குவர்.

இவ்வேளையில், குறைந்தது 9 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இஸ்லாமாபாத் கூறியது.

எனினும், தனது இராணுவ நிலைகள் எதுவும் தாக்கப்படவில்லை என அது உறுதிப்படுத்தியது.

இந்த “ஆப்பரேஷன் சிந்தூர்” நடவடிக்கை வெறும் இராணுவ பதிலடி அல்ல; அதற்கும் மேலானது என இந்திய அரசாங்க வட்டாரங்கள் கூறின.

எல்லை கடந்த பயங்கரவாதத்தையோ அல்லது அதற்கு உடந்தையாக இருக்கும் அரசாங்கங்களையோ இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதை இந்தியா நிரூபித்துள்ளதாகவும் அவை வருணித்தன.

தாக்கப்பட்ட 9 இடங்களும் பயங்கரவாத நடவடிக்கைகளின் மையங்களாக அடையாளம் காணப்பட்டவையாகும்.

இதனால் அக்கும்பல்களின் செயல்பாட்டுத் திறன் கணிசமாகக் குறைந்துள்ளது.

பாகிஸ்தானிய இராணுவம், பயங்கரவாத கும்பல்களுக்கு ஆதரவளிப்பதற்கான தெளிவான ஆதாரங்களை இந்திய உளவுத்துறை மேற்கோள் காட்டியுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!