கோலாலம்பூர், நவ 30 – ஜோர்டானிய பெண்மணியைத் தாக்கிய ஒரு ஐரோப்பிய சுற்றுப் பயணி கைது செய்யப்பட்டு 4 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
30 வயது கணக்காய்வாளரான ஜோர்டானிய பெண்மணி கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் ஜாலான் செண்டானாவில் உள்ள ஒரு உணவகத்தில் பானம் வாங்கிக் கொண்டிருந்த சமயத்தில் தனக்கு அறிமுகம் இல்லாத அந்த ஐரோப்பிய சுற்றுப்பயணி திடிரென அவரின் வயிற்றில் குத்தி மேலும் காயப்படுத்தப் போவதாக மிரட்டி இருக்கின்றார்.
அதே நாளில் அப்பெண்மணி போலிஸ் புகார் செய்ததை அடுத்து 48 வயதான அந்த ஆடவன் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி OCPD நூர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார். யாராக இருந்தாலும் நாட்டின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்ய தவறுவோர் மீது போலிஸ் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.