Latestமலேசியா

நஜீப் மீதான பாதுகாப்பு கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்ட வழக்கமான நடைமுறைக்கு ஏற்பவே உள்ளது

கோலாலம்பூர், ஏப் 17 – கோலாலம்பூர் தேசிய பள்ளிவாசலில் கடந்த திங்கட்கிழமையன்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கான பாதுகாப்பு கட்டுப்பாடுகள், SOP எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட வழக்கமான நடைமுறைகளுக்கு ஏற்பவே இருந்தன.

ஒவ்வொரு கைதிக்கும் சொந்த ஆபத்து நிலை இருப்பதாக மலேசியசிறைச்சாலைத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் அஸிஸ் அப்துல் ரசாக் தெரிவித்தார். ஒவ்வொரு வகை கைதிகளுக்கும் அதன் சொந்த ஆபத்து நிலை இருப்பதால், நிர்ணயிக்கப்பட்ட வழக்கமான நடைமுறைக்கு ஏற்பவே நாங்கள் இணங்கவேண்டியுள்ளதால் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என அவர் கூறினார்.

எனவே நஜிப் மீதான சிறைத்துறையின் கட்டுப்பாடு மிகவும் கடுமையாக இருந்தது என்ற குற்றச்சாட்டு எழவேண்டிய அவசியமில்லை. கைதிகளின் பாதுகாப்பின் அளவை நாங்கள் வலுப்படுத்த விரும்கிறோம் என அப்துல் அஸிஸ் விளக்கம் அளித்தார்.

முன்னதாக, கடந்த திங்கட்கிழமை தேசிய பள்ளிவாசலில் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக நஜிப்பிற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. 1MDB வழக்கு விசாரணை நீதிபதி டத்தோ Colin Lawrence Sequerah முன்னிலையில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது துன் அப்துல்லா படாவியின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு 72 வயதான நஜிப் அனுமதிக்கப்பட்டார்.

தேசிய பள்ளிவாசலில் நஜீப் இருந்தபோது மலேசிய சிறைச்சாலைத்துறையின் பாதுகாப்பு கட்டுப்பாடு மிகவும் கடுமையாக இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!