
கோலாலம்பூர், மே 22 – மலேசியாவின் பணவீக்கம் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 1. 4 விழுக்காடு உயர்ந்து பயனீட்டாளர் விலை குறியீடு 134. 3 ஆகியது.
ஒரு ஆண்டுக்கு முன் ஏப்ரல் மாதத்தில் பயனீட்டாளர் குறியீடு 132.4 ஆக இருந்ததாக புள்ளி விவரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
தனிநபர் பராமரிப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் இதர பொருட்கள் மற்றும் சேவைகள் பிரிவில் மார்ச் 2025 இல் 3.6 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடும்போது 4.1 சதவீத அதிகரிப்பே இந்த உயர்வுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
இது பொருட்கள் மற்றும் சேவைகளின் 13 குழுக்களில் ஒன்றாகும்.
இவ்வாண்டு மார்ச் மாதம் கல்வி 2.3 விழுக்காடு உயர்வு கண்டது. அதேவேளையில் வீட்டுவசதி, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் பிற எரிபொருள்கள் 2.0 விழுக்காடு அதிகரித்தது.மார்ச் மாதத்தில் இது 1. 9 விழுக்காடாக இருந்தது.
2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது உணவு மற்றும் பானங்கள் 2.3 விழுக்காடாக குறைந்தது. பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் கலாச்சாரம், 1.3 விழுக்காடு ,0.9 சதவீதம் மற்றும் தளவாடங்கள், வீட்டு உபகரணங்கள் மற்றும் வழக்கமான வீட்டு பராமரிப்பு, 0.1 சதவீதம் குறைந்துள்ளது.
முந்தைய மாதத்தைப் போலவே இதே விழுக்காட்டை உணவகம் மற்றும் தங்குமிட சேவைகள் 2.9 விழுக்காடும் , காப்பீடு மற்றும் நிதி சேவைகள்1.5 விழுக்காடும் , மதுபானங்கள் மற்றும் புகையிலை 0.8 விழுக்காடும் மற்றும் போக்குவரத்து 0.7 விழுக்காடும் குறைந்தன.
கூடுதலாக, தகவல், தொடர்பு மற்றும் ஆடை மற்றும் காலணிகள் முறையே 4.5 விழுக்காடு முதல் மற்றும் 0.1 விழுக்காடு பதிவு செய்து எதிர்மறையான நிலைமையில் இருந்தன என்று புள்ளிவிவரத்துறையின் தலைவர் டத்தோஸ்ரீ DR MOHD UZIR MAHIDIN தெரிவித்தார்