ஈப்போ, டிச 16 – ஈப்போவில் நிகழ்ந்த விபத்தில் 17 வயது இளைஞன் மரணம் அடைந்தது தொடர்பில் விசாரணைக்காக கெடாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈப்போ தாமான் ஜாதியில் நிகழ்ந்த விபத்து குற்து நேற்று மதியம் தங்களுக்கு புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அந்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார் என ஈப்போ போலீஸ் தலைவர் யஹாயா ஹாசன் தெரிவித்தார்.
மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியது தொடர்பில் சாலை போக்குவரத்து சட்டத்தில் 41ஆவது (1) விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதால் அந்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் உட்பட பல கோணங்களில் போலீஸ் விசாரணையை நடத்தி வருவதாகவும் யஹாயா ஹாசன் கூறினார்.
போதுமான ஆதாரம் இருந்தால் தனது அதிகாரிகள் உட்பட எவரையும் போலீசார் தற்காக்கமாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.