Latestமலேசியா

ஜொகூர் பாருவில் திடீர் வெள்ளம்

ஜொகூர் பாரு, டிச 1 – ஜோகூர் பாருவிவ் நேற்று இரவு முதல் பெய்த மழையைத் தொடர்ந்து இன்று காலையில் பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.கம்புங் நுசா டாமை, ஜாலான் மசாய் லாமா, பாசிர் குடாங் செர்டா, கம்போங் பய கெனாங்கன் ஆகிய இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 1.30 மணி முதல் அந்த இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதாக பொது தற்காப்பு படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர்ச்சியான மழையினால் திடீர் வெள்ளம் ஏப்பட்டதாக கூறப்பட்டது. வெள்ளம் குறித்த தகவல் பெறப்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கையை தாங்கள் மேற்கொண்டதாக அந்த பேச்சாளர் கூறினார். பொதுமக்களில் பலர் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!