
மலாக்கா, ஏப் 30 – மலாக்கா, Semabok, Taman Kasturi யிலுள்ள ஒரு வீட்டில் கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்ட நபர் சாவியினால் குடும்ப மாது ஒருவரின் கழுத்தை கீறியதாக வாட்சாப் புலனத்தில் வைரலான தகவலை போலீசார் மறுத்துள்ளனர். இந்த தகவல் Semabok வட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாக மலாக்கா போலீஸ் தலைவர் டத்தா சுல்கைரி முக்தார் ( Dzulkhairi Mukhtar ) தெரிவித்தார்.
வீட்டிற்குள்ளே இருந்தபோது ஆடவன் ஒருவன் தன்னிடம் கொள்ளையிட முயன்றதாக ஏப்ரல் 24ஆம்தேதியன்று குடும்ப பெண் ஒருவரிடமிருந்து போலீஸ் புகாரை பெற்றதாகவும் இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 43 வயதுடைய சந்தேகப் பேர்வழி ஒருவன் கைது செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் Dzukhairi Mukhtar வெளியிட்ட அறிக்கையில் விவரித்தார்.
புகார்தாரர் தெரிவித்ததைப் போன்று அந்த ஆடவன் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கொள்ளை முயற்சியில் மட்டுமே ஈடுபட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளான். மேலும் விசாரணையின்போது அந்த சந்தேகப் பேர்வழி கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டு காயம் ஏற்படுத்தியதாக வாட்சாப் புலனத்தில் வெளியான தகவலில் அடிப்படை உண்மையில்லை என்று தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழி இதற்கு முன் நான்கு குற்றப்பின்னணியை கொண்டிருப்பதும் தெரியவந்ததால் தண்டனை சட்டத்தின் 33ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக Dzukhairi Mukhtar கூறினார்