
புத்ராஜெயா, ஜூன்-20 – மலேசியா இவ்வாண்டு தனது முதல் கோவிட்-19 மரணத்தைப் பதிவுச் செய்துள்ளது.
மரணமடைந்தவர், நீரிழிவு, இருதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் என்பதோடு, இரண்டாவது ஊக்கத் தடுப்பூசி போடாதவர் ஆவார்.
இது, கடந்தாண்டு மே 26-ஆம் தேதிக்குப் பிறகு நாட்டில் பதிவான முதல் கோவிட் உயிரிழப்பும் கூட.
கோவிட் மரணங்கள் கணிசமாகக் குறைந்து வருவதையே இது காட்டுகிறது; கடந்தாண்டு முழுவதும் 57 பேர் கோவிட்டால் மரணமடைந்த நிலையில், இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் இந்த ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.
கோவிட் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வ பலனைத் தந்திருப்பதற்கான சான்றே இதுவென,
சுகாதார அமைச்சான KKM கூறியது.
இவ்வேளையில், ஆண்டின் 24-ஆவது வாரத்தில் கோவிட் தொற்று 14 விழுக்காடு அதிகரித்து, 3,379 சம்பவங்களாக பதிவாகியுள்ளது.
அவற்றில் 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக இவ்வாண்டு இதுவரையில் 21,738 கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.