
மோஸ்கோ, மே-15 – சிக்கலாகி வரும் உலகச் சூழலில் ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளுடன் வியூக உறவை வளர்த்துக் கொள்வது, பெரும் நன்மை பயக்கும்.
தொழில்நுட்பம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பு மேற்கொள்ள இது வழி வகுக்கும்.
எனவே தான், மலேசியா இப்போதெலாம் வாய்ப்புகள் வரும் வரை காத்திருப்பதில்லை.
மாறாக, அதுவாகவே வாய்ப்புகளைத் தீவிரமாகத் தேடிச் செல்கிறது.
மலேசியா இன்றளவும் அணி சேரா நாடு தான்; ஆனால் அதற்காக ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் நாம் உறவை வலுப்படுத்தக் கூடாது என்றோ, முடியாது என்றோ இல்லை.
அவ்வகையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ரஷ்யாவுக்கு மேற்கொண்டுள்ள அதிகாரப்பூர்வ பயணம், மலேசியாவின் வெளியுறவுக் கொள்கை பக்குவப்பட்டிருப்பதை புலப்படுத்துகிறது.
அதோடு தொலைநோக்குப் பார்வை கொண்டதாகவும் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக வாணிபம் தொடங்கி கல்வி வரை பல்வேறு துறைகளில் இரு வழி ஒத்துழைப்புக்கான கதவுகளை இப்பயணம் திறந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில், கோவிட் பெருந்தொற்றுக்கு பிந்தைய புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப மலேசியாவும் புத்திசாலியாக காய்களை நகர்த்த வேண்டும்.
அதை நன்கு புரிந்தவராய் தான், டத்தோ ஸ்ரீ அன்வார் மோஸ்கோ சென்றுள்ளார்.
அது அடிபணிவதற்கு அல்ல, மாறாக சமமாக நிமிர்ந்து நிற்க…