Latestவிளையாட்டு

அகில இங்கிலாந்து பூப்பந்துப் போட்டி; காலிறுதிக்குள் நுழைந்த பெர்லி தான்-எம் தீனா

பர்மிங்ஹம், மார்ச்-14 -தேசியப் பூப்பந்து மகளிர் இரட்டையரான பெர்லி தான் – எம். தீனா, அகில இங்கிலாந்து பூப்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இந்தோனேசியாவின் Apriyani Rahayu-Siti Fadia Silva Ramadhanti ஜோடியை 21-16, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வெறும் நாற்பதே நிமிடங்களில் அவர்கள் தோற்கடித்தனர்.

இதையடுத்து பர்மிங்ஹமில் காலிறுதிக்குள் நுழைந்த இரண்டாவது மலேசிய இரட்டையராக பெர்லி-தீனா திகழ்கின்றனர்.

நேற்றைய ஆட்டத்தின் இரண்டாவது செட்டில் 13-7 என மலேசியா முன்னணியில் இருந்த போது தீனாவுக்கு காயம் ஏற்பட்டதால், இந்தோனேசிய ஜோடி புள்ளிகளை அள்ளும் வாய்ப்பிருந்தது.

ஆனால், அவ்வப்போது கால் நொண்டிய நிலையிலும் எப்படியோ சமாளித்து ஆட்டத்தை வெற்றியுடன் முடிப்பதை அவர் உறுதிச் செய்தார்.

உலகத் தர வரிசையில் ஐந்தாமிடத்திலுள்ள பெர்லி-தீனா ஜோடி, 29-ஆவது இடத்திலிருக்கும் அந்த இந்தோனேசிய ஜோடியை வீழ்த்துவது, 6 ஆட்டங்களில் இது நான்காவது முறையாகும்.

பெர்லி-தீனா இருவரும் இன்றைய காலிறுதி ஆட்டத்தில், கடந்தாண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் தங்களைத் தோற்கடித்த ஜப்பானின் Nami Matsuyama-Chiharu Shida இணையைச் சந்திப்பர்.

முன்னதாக, தேசியக் கலப்பு இரட்டையர் Goh Soon Huat-Shevon Jemie Lai, ஸ்காட்லாந்து ஜோடியை நேரடி செட்களில் தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!