Latestமலேசியா

சுங்கைப் பட்டாணி, ஜாலான் லென்சோங்கில் மண்வாரி இயந்திரத்தில் கார் மோதியதில் பெண் மரணம்

சுங்கைப் பட்டாணி , அக் 16 – பெரோடுவா அக்ஸியா காரை ஓட்டிச் சென்ற பெண் ஒருவர் மண்வாரி இயந்திரத்தில் மோதி விபத்திக்குள்ளானதால் மரணம் அடைந்தார். இந்த பரிதாப சம்பவம் சுங்கைப் பட்டாணி, ஜாலான் லென்சோங்கில் ( Jalan Lencong ) இன்று விடியற்காலை மணி 5.30 அளவில் நிகழ்ந்தது.

தலையில் கடுமையாக காயம் அடைந்த டாருல்ஹமான் பெர்டானாவைச் (Darulaman Perdana) சேர்ந்த சமையல்காரரான 48 வயதுடைய சுரைனி மூராட்
( Zuraini Murad) விபத்து நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

சாலையின் வலது புறம் சென்று கொண்டிருந்த அந்த மண்வாரி இயந்திரத்தின் பின்புறம் சுரைனி ஒட்டிய கார் மோதியதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் வான் அஷாருடின் வான் இஸ்மாயில் ( Wan Azaruddin Wan Ismail ) தெரிவித்தார். இந்த விபத்தில் 24 வயதுடைய மண்வாரி இயந்திரத்திர ஓட்டுனர் காயம் அடையவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!