Latestமலேசியா

ஜாலான் ஈப்போவில் மதுபோதையில் சகத் தொழிலாளியுடன் ஏற்பட்ட சண்டையில் ஆடவர் கொலை

கோலாலம்பூர், ஜூன்-30 – கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் உள்ள பழைய இரும்பு சாமான் கடையொன்றில் மதுபோதையில் சகத் தொழிலாளியுடன் சண்டையிட்ட ஆடவர், பாராங் கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

தனது 2 தொழிலாளர்கள் சண்டையிட்டுக் கொள்வதாக சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு அந்த இரும்புக் கடையின் உரிமையாளர் போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

தடயவியல் குழு மற்றும் K9 மோப்ப நாய்கள் குழுவுடன் சம்பவ இடம் விரைந்த போலீஸ், சட்டையில்லாமல் இரத்த வெள்ளத்தில் ஆடவர் இறந்துகிடந்ததை கண்டது.

37 வயது அந்த உள்ளூர் நபரின் தலை, தோள்பட்டை, கழுத்து, தாடை ஆகியப் பகுதிகளில் வெட்டுக் காயங்கள் கண்டறியப்பட்டன.

பாராங் கத்தியால் வெட்டிக் கொன்ற மியான்மார் ஆடவர் தப்பியோடி விட்டான்.

அவனைத் தீவிரமாகத் தேடி வருவதாக செந்தூல் போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!