Latestமலேசியா

இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்கள் ஆராஞ்சுப் பழங்களுக்கு எஸ்.எஸ்.டி வரி விலக்கு

புத்ரா ஜெயா, ஜூன் 26 – இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்கள் மற்றும் ஆரஞ்சுகளை விரிவாக்கப்பட்ட விற்பனை மற்றும் சேவை வரியிலிருந்து ) விலக்கு அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஏழைகள் மற்றும் B40 வருமானக் குழுவைச் சேர்ந்த பலர் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் மலிவு விலையில் இருப்பதால் அவற்றை வாங்குவார்கள் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், இறக்குமதி செய்யப்பட்ட பழங்களை உட்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தைக் கொண்டிருந்தாலும், அமைச்சரவை நேற்று இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்ததாகக் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் அதிருப்தி இருப்பதை நான் கண்டேன். ஏழைகளும் B40 மக்களும் இன்னும் இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்களையும் ஆரஞ்சுகளையும் உட்கொள்கின்றனர். ஏனெனில் அவை மலிவானவை என அன்வார் விவரிததார். பொதுவாக நிதியமைச்சர் ஒரு முடிவை எடுக்கும்போது, ​​அவர் அசைந்து கொடுக்க மாட்டார்.

ஆனால் நான் எனது அமைச்சரவை சகாக்களிடம் விரிவாக்கப்பட்ட SST யிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்களையும் ஆரஞ்சுகளையும் விலக்குவது உண்மையில் நியாயமானது என்று குறிப்பிட்டதை Madani நகர திட்டத்தைத் தொடங்கி வைத்துபேசியபோது அன்வார் சுட்டிக்காட்டினார். “ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் மருத்துவரை விலக்கி வைக்கிறது” என்ற பழமொழியின் காரணமாக ஆப்பிள்களுக்கான தேவை ஏற்பட்டதாகவும் பிரதமர் நகைச்சுவையாகக் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!