ஷா ஆலாம், மார்ச் 28 – தலைநகர், டமன்சாராவிலுள்ள, பேரங்காடி ஒன்றின் கார் நிறுமித்துமிடத்திலிருந்து, ஐந்து லட்சம் ரிங்கிட் ரொக்க பண நோட்டுகள் அடங்கிய சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், அதனை உரிமை கோரி இதுவரை யாரும் வரவில்லை என்பதை போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
இம்மாதம் 20-ஆம் தேதி, சம்பந்தப்பட்ட பேரங்காடியின் பாதுகாவலர்கள் சிலர் அந்த சூட்கேசை கண்டெடுத்தனர்.
அந்த சூட்கேசை உரிமைக் கோரி இதுவரி யாரும் முன்வரவில்லை. அதற்காக போலீஸ் காத்திருப்பதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.
அந்த பணம் தம்முடையது தான் என கடந்த திங்கட்கிழமை கூறியிருந்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் உரிமையாளம், உடல்நலக் குறைவு காரணமாக இதுவரை வாக்குமூலம் அளிக்க முன் வரவில்லை என்பதையும் ஹுசைன் உறுதிப்படுத்தினார்.
பணம் காணாமல் போனது தொடர்பில், அந்நிறுவனத்தினர் இம்மாதம் 21-ஆம் தேதி, ஷா ஆலாம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
எனினும், அந்நிறுவனத்தின் உரிமையாளர் இதுவரை வாக்குமூலம் அளிக்க வராதது குறிப்பிடத்தக்கது.