Latestஉலகம்

ஈரானின் அணு சக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க வான் தாக்குதல்களின் தாக்கத்தை ட்ரம்ப் ‘மிகைப்படுத்தி’ பேசுகிறார்; அயத்தொல்லா குற்றச்சாட்டு

தெஹ்ரான், ஜூன்-27 – ஈரானிய அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்க வான்படை நடத்தியத் தாக்குதல்களின் சேதங்கள் மற்றும் தாக்கம் குறித்து, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் ‘மிகைப்படுத்தி’ பேசுகிறார்.

ஈரானிய உச்சத் தலைவர் அயத்தொல்லா அலி கொமேனி அவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தாக்குதலுக்குப் பிறகு முதன் முறையாக நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய போது அயத்தொல்லா அதனைத் தெரிவித்தார்.

“எங்களின் அணு சக்தி நிலையங்களை அழித்து விட்டதாக அமெரிக்கா பீற்றி வருகிறது; ஆனால் அவர்கள் சிறிய நாடான எங்களிடம் நன்றாக ‘வாங்கிக் கட்டிக்’ கொண்டார்கள் என்பதே உண்மை” என அயத்தொல்லா கூறிக் கொண்டார்.

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் ‘வெற்றிப்’ பெற்றதாக பெருமிதம் தெரிவித்த அயத்தொல்லா, அமெரிக்காவிடம் அடிபணியும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.

இஸ்ரேல் – ஈரான் இடையிலான 12-நாள் போரை முடிவுக்கு வந்த இரண்டாவது நாளில் அயத்தொல்லா தோன்றி உரையாற்றியுள்ளார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!