Latestஉலகம்

பேங்கோக் வளர்ப்புப் பண்ணையிலிருந்து முதலைகள் தப்பின ; சுற்று வட்டார மக்கள் பீதி

பேங்கோக், மார்ச் 18 – தாய்லாந்து தலைநகர் பேங்கோக்கிலிருந்து சுமார் 48 கிலோமீட்டார் தூரத்தில், சமுட் சகோன் எனும் பகுதியிலுள்ள, முதலை பண்ணை ஒன்றிலிருந்து தப்பிய சில முதலைகளால் சுற்று வட்டார மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

அந்த முதலைகள் பராமரிக்கப்பட்டு வந்த குளம் ஒன்றின், தடுப்பு சுவர் உடைந்ததை அடுத்து அவை தப்பியதாக கூறப்படுகிறது.

தப்பிய முதலை ஒவ்வொன்றும் சுமார் 100 கிலோகிராம் எடையிலான பெரிய முதலைகள் என்பதால் அவற்றை மீண்டும் பிடிப்பதில் சிரமம் ஏற்படுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை அவற்றில் சில முதலைகள் சிக்கியுள்ள வேளை ; எஞ்சியவற்றை தேடும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகளின் உதவியோடு, மயக்க ஊசி செலுத்தப்பட்டு அந்த முதலைகளை பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

அதனால், வேண்டத்தகாத சம்பவங்களை தவிர்க்க, பொதுமக்களும், மீனவர்களும் ஜாக்கிரதையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முறையான அனுமதியோடு செயல்பட்டு வரும் அந்த முதலை பண்ணையில், 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில், 146 முதலைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!