Latestமலேசியா

காரில் தப்பியோடிய ஆடவரை ஸ்ரீ கெம்பாங்கானில் விரட்டிப் பிடித்த போலீஸ்; போதைப்பொருள் சிக்கியது

செர்டாங், டிசம்பர்-26 – போலீசிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் காரை வேகமாக ஓட்டிச் சென்ற ஆடவர், செர்டாங், ஸ்ரீ கெம்பாங்கானில் பிடிபட்டார்.

நேற்று மதியம் 1 மணி வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், Honda City கார் சந்தேகத்திற்குரிய வகையிலிருந்ததைக் கண்ட
குற்றச்செயல் தடுப்பு ரோந்து போலீசார், காரை நிறுத்தச் சொல்லியிருக்கின்றனர்.

எனினும் 41 வயது ஓட்டுநர் நிற்க மறுத்து LDP நெடுஞ்சாலை வழியாக பூச்சோங் நோக்கி காரை வேகமாக ஓட்டினார்.

விரட்டிச் சென்ற போலீஸ் Jalan Persiaran Pinggiran Putra Seri Kembangan சாலையில் காரை மடக்கிப் பிடித்தது.

சந்தேக நபரை சோதனையிட்டதில் ஷாபு வகை போதைப்பொருள் அடங்கிய பிளாஸ்டிக் பேக்கேட் கைப்பற்றப்பட்டது.

பல்வேறு குற்றங்களுக்காக அந்நபர் ஏற்கனவே 18 குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டததாக, செர்டாங் போலீஸ் தலைவர் AA அன்பழகன் தெரிவித்தார்.

சந்தேக நபர், பரபரப்பான சாலையில் வாகனங்களுக்கு இடையில் புகுந்து வேகமாக காரோட்டிச் செல்வதும், அவரைப் போலீஸ் நிறுத்த முயலுவதும் முன்னதாக வீடியோ மூலமாக வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!