Latestமலேசியா

குளுவாங்கில் 5 வாகனங்களை உட்படுத்தியக் கோர விபத்து; 3 பேர் பலி

குளுவாங், மார்ச்-28- ஜோகூர், குளுவாங்கில் நேற்றிரவு 5 வாகனங்களை உட்படுத்தி நிகழ்ந்த கோர விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

தெற்கு நோக்கிச் செல்லும் PLUS நெடுஞ்சாலையின் 58.1-ஆவது கிலோ மீட்டரில் இரவு 11.48 மணிக்கு அவ்விபத்து நேர்ந்தது.

மேலும் சிலர் காயமடைந்த வேளை, மூவர் காயமின்றி உயிர் தப்பினர்.

MPV Honda Stepwagon, Toyota Camry, Proton X50, டிரேய்லர் உள்ளிட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கின.

அவற்றில் MPV-யும் டிரேய்லரும் தீப்பற்றிக் கொண்டன.

தீயணைப்புப் படையைச் சேர்ந்த 13 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்கள் குறித்த தகவல்கள் இன்னமும் விசாரணையில் இருப்பதால், சம்பவம் குறித்த முழு அறிக்கை பிறகு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!