Latestமலேசியா

சக்கர நாற்காலியில் இருப்பவர்களை தண்ணீர் மலை உச்சிக்கு தூக்கிச் சென்ற அறப்பணி வாரியத்தின் நல்லெண்ண நிகழ்வு

ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-3 – பினாங்கு தண்ணீர் மலை ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு இந்து அறப்பணி வாரியமும் மலேசியத் தமிழன் உதவும் கரங்களும் இணைந்து நேற்று நல்லெண்ண நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

25 மாற்றுத் திறனாளிகளைச் சக்கர நாற்காலியோடு 513 படிகளைக் கடந்து மலை உச்சிக்குத் தூக்கிச் செல்வதே அதன் நோக்கமாகும்.

ஸ்ரீ பாலதண்டாயுதபாணியை நேரில் தரிசிக்கவும், மற்றவர்களைப் போலவே அபிஷேகத்தைக் காணவும், சிறப்பு பூஜையில் பங்கேற்கவும் இதன் மூலம் அவர்களுக்கு வாய்ப்புக் கிட்டியது.

அறப்பணி வாரியத் தலைவர் RSN ராயர், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ராஜூ, செனட்டர் Dr லிங்கேஷ்வரன் மற்றும் இதர ஆணையர்களான டத்தோ தினகரன், ஷண்முகநாதன், திருமதி ஜகுரிதி, சந்திரமோஹன் உள்ளிட்டோர் அதில் பங்கேற்று சிறப்பித்தனர்.

அவர்களின் வருகை, மத மரபுகளை உட்படுத்திய நடவடிக்கைகளுக்கான சமூக ஆதரவின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது.

இந்த உன்னத முயற்சியானது, தைப்பூசத்தின் உண்மையான சாரதமான நம்பிக்கை, தியாகம் மற்றும் இரக்கம் ஆகியவற்றை நிரூபித்தது.

அத்திட்டத்திற்கு நிதி ஆதரவளித்த அறப்பணி வாரியம், மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு பரிசுகளை வழங்கி, அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் பக்தியை கண்டு மெச்சியது.

பக்தர்களைத் தூக்கிச் செல்வதில் தன்னலமின்றி உதவிய தன்னார்வலர்களின் அர்ப்பணிப்புக்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாகும்; இது அவர்களுக்கும் ஒரு நிறைவான ஆன்மீக அனுபவத்தைத் தந்தது.

வழிபாட்டுத் தலங்களை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதன் முக்கியத்துவத்தையும், சமூகத்திற்குள் ஒற்றுமை, அக்கறை உள்ளடக்கிய உணர்வை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இந்நிகழ்வு எடுத்துக் காட்டியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!