
புது டெல்லி, ஏப்ரல்-29, இந்திய அதிபர் மாளிகையில் நடைபெற்ற கோலாகல நிகழ்வில் நடிகர் அஜித் குமார் பத்ம பூஷன் விருதுப் பெற்றார்.
அதிபர் திரௌபதி முர்மு அஜித்துக்கு அவ்விருதை வழங்கிய போது, அரங்கில் கைத்தட்டல் பறந்தது.
பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த மனைவி ஷாலினி, மகள் மற்றும் அஜித்தின் சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினர் எழுந்து நின்று கைத்தட்டி தங்களின் எல்லையில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கலைத்துறைக்கான சிறந்த பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசாங்கத்தின் மூன்றாவது மிக உயரிய இந்த பத்ம பூஷன் விருது அஜித்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
நடிப்பைத் தவிர கேமரா வெளிச்சத்தை விரும்பாமல் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தும் அஜித்துக்கு, இந்த 2025-ஆம் ஆண்டு உண்மையிலேயே மிகச் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது.
கார்ப்பந்தயத்தில் வெற்றி, ‘குட் பேட் அக்லி’ படத்தின் மாபெரும் வசூல் சாதனை, பத்ம பூஷன் விருது என அடுத்தடுத்து ஊடகங்களில் அவர் முக்கியத்துவம் பெற்று வருகிறார்.
அவரின் தீவிர இரசிகர்களும் சமூக ஊடகங்களில் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.
பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார்