
கோலாலம்பூர், ஜூன்-18 – கோலாலம்பூரில் சிவப்பு விளக்கை மீறிச் செல்ல முயன்ற 19 வயது p-hailing ஓட்டுநர், ஒரு கார் மீது மோதி, காற்றில் ‘குட்டிக்கரணம்’ அடித்து விழுந்து காயமடைந்தார்.
ஞாயிற்றுக்கிழமை Jalan Awan Besar சாலையில் அவ்விபத்து நிகழ்ந்ததாக, கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமுலாக்கத் துறையின் தலைவர் சாம்சூரி ஈசா கூறினார்.
அதில் அவ்விளைஞருக்கு கைகளிலும் உதட்டிலும் காயமேற்பட்டது.
எனினும் வெளிநோயாளியாகவே அவர் சிகிச்சைப் பெற்றார்.
அவ்வாடவர் சிவப்பு விளக்கை மீற முயலுவது CCTV கேமராவில் பதிவாகியுள்ளதை சாம்சூரி உறுதிப்படுத்தினார்.
பச்சை விளக்கு விழுந்ததால் காரோட்டி முறைப்படி வளைந்து விட்டது வைரலான வீடியோவில் தெரிந்தது.