Latest

செவ்வாய் கிரகத்தில் 328 அடி அகல பள்ளத்தைக் கண்டுபிடித்த நாசா; ‘ஏலியன்கள்’ இருக்கக் கூடுமோ?

வாஷிங்டன், ஏப்ரல்-19, செவ்வாய் கிரகத்தில் ஒரு பெரிய மர்ம பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ‘ஏலியன்’ எனப்படும் வேற்றுகிரகவாசிகளின் நிலத்தடி உலகிற்கான “வாயில்” என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

328 அடி அகலமுள்ள இப்பள்ளம் தோன்றியதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

என்றாலும், ஒரு விண்கல் தாக்கத்தால் இது உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

செவ்வாய் கிரகத்தின் தீவிர வெப்பநிலை மற்றும் மேற்பரப்பு அளவிலான கதிர்வீச்சு மனித வாழ்க்கைக்கு எளிதில் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்.

எனவே, அச்சிவப்பு கிரகத்தின் கடுமையான நிலைமைகளிலிருந்து உயிரினங்களைப் பாதுகாக்க, அந்த நிலத்தடி சுரங்கப்பாதையே சரியானதாக இருக்குமென நாசா கூறியது.

இப்பள்ளமானது, வேற்றுகிரகவாசிகள் வாழும் ஒரு விரிவான நிலத்தடி சுரங்கப்பாதை வலையமைப்பிற்கு இட்டுச் செல்லும் முக்கியப் புள்ளியாக இருக்கலாம்.

எதிர்காலத்தில் விண்கலங்கள், ரோபோக்கள் மற்றும் மனித கிரகங்களுக்கு இடையேயான ஆய்வாளர்களுக்கும் கூட இது பாதுகாப்பான தங்குமிடமாக அமையலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

செவ்வாய் கிரகத்தின் சுற்றுச் சூழல் இப்போது வேண்டுமானால் மனித வாழ்க்கைக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம்;

ஆனால் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியைப் போலவே அங்கு உயிர்கள் இருந்திருக்கக்கூடிய சாத்தியங்களை விஞ்ஞானிகள் திடமாக நம்புகின்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!