
பத்து கேவ்ஸ், ஜூன் 25 – வருகின்ற ஜூன் 28 ஆம் தேதி, பத்துமலை ஆலயத்தில், காலை மணி 9.00க்கு ஸ்ரீ ஐஸ்வர்யா பைன் ஆர்ட்ஸ் ஏற்பாட்டில் கோலாலும்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் ஆதரவுடன் டி.எஸ்.கே குழுமம் மற்றும் மஹிமா இணைந்து நடத்தும் இசை வர்தினி 2.0 எனும் பிரமாண்டமான கலாச்சார மற்றும் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், நேரடி இந்திய இசைக்குழுவினரின் கச்சேரி, வீணை, வயலின், மிருதங்கம், தபேலா, விசைப்பலகை மற்றும் முருக பெருமானின் முன்னிலையில் மாணவர் கலைஞர்களின் இசை படைப்புகள் போன்றவை இடம்பெறவுள்ளது.
இந்த தெய்வீக நிகழ்வில், பத்துமலை முருகனின் முன்னிலையில் ஒரு பக்தி இசை சமர்ப்பணமும் பங்குபெறவுள்ளது.
இந்த அற்புதமான இசை நிகழ்வில் பங்குபெறவிருக்கும் கலைஞர்களை ஆதரிக்கவும், ஆசீர்வதிக்கவும் அனைவரும் ஒன்றிணைந்து திரள வேண்டுமென்று ஏற்பாட்டாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றார்கள்.