Latest
ஜூலை 1 வரை வெப்ப வானிலை தான்; வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள பொது மக்களுக்கு அறிவுரை

கோலாலம்பூர், ஜூன்-28 – இன்று முதல் ஜூலை 1 வரை நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெப்ப வானிலை நீடிக்கும் என்பதோடு, மழையும் குறைவாகப் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
இக்காலக்கட்டத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 35 பாகை செல்சியஸை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ஒரு பாதுகாப்புக்காக, பொது மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென, மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையான MET Malaysia கேட்டுக் கொண்டுள்ளது.
வானிலை குறித்த ஆகக் கடைசி தகவல்களுக்கு பொது மக்கள் http://www.met.gov.my/ என்ற அத்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை வலம் வரலாம்.
MyCuaca கைப்பேசி செயலியிலும் அத்தகவல்களைப் பெறலாம் என MET அறிக்கையொன்றில் கூறியது