
கோலாலாம்பூர் – மே-23 – உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr பி.ராமசாமி இன்று முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட்டைச் சந்தித்து பேசினார்.
கோலாலம்பூரில் உள்ள மகாதீரின் அலுவலகத்தில் நடைபெற்ற அச்சந்திப்பில், உரிமைக் கட்சியின் துணைத் தலைவர் டேவிட் மார்ஷல், சதீஸ் முனியாண்டியும் பங்கேற்றனர். பல அழுத்தமான பிரச்னைகள் உட்பட பல்வேறு நாட்டு நடப்புகள் குறித்து அதன் போது விவாதிக்கப்பட்டன.
மாறி வரும் மலேசிய அரசியல் சூழலில் இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கான வழிகளையும் அவர்கள் ஆராய்ந்தனர். பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மடானி அரசாங்கத்தின் பேச்சும் செயலும் வேறுபட்டிருப்பதை மகாதீர் சுட்டிக் காட்டியதாக ராமசாமி கூறிக் கொண்டார்.
தென் தாய்லாந்தில் தாய் முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்கள், அதை மலேசியா கையாளும் விதம் குறித்தும் பேசப்பட்டது.