
கோலாலம்பூர், ஏப் 28- மலாக்கா டுரியான் துங்கலில் உள்ள ஸ்ரீ அஸ்ட தச புஜ காளியம்மன் ஆலயம் இவ்வாண்டு ஜூன் 8ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் காணவிருப்பதை முன்னிட்டு அந்த ஆலயத்தை தூய்மைப்படுத்தும் பணியில் மலேசிய இந்திய தீயணைப்பு அதிகாரிகளும், ஓய்வு பெற்ற அதிகாரிகளும் அண்மையில் ஈடுபட்டனர்.
கிள்ளான் பள்ளத்தாக்கு , மலாக்கா நெகிரி செம்பிலான் , மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 25 இந்திய தீயணைப்பு அதிகாரிகளும் ஓய்வு பெற்ற அதிகாரிகளும் இந்த நடவடிக்கையில் மிகவும் மகிழ்ச்சியோடும் அர்ப்பணிப்போடும் ஈடுபட்டனர்.
மலேசிய தீயணைப்பு தலைமையகத்தின் அதிகாரிகளான மூத்த துண தீயணைப்பு ஆணையர் முருகையா முத்துசாமி, தீயணைப்பு Superintendent குமரன் ராஜேந்திரன், ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் சிறப்பு சேர்த்தனர்.
மலாக்கா தீயணைப்பு அதிகாரிகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகச்சிக்கு இரண்டாவது தீயணைப்பு அதிகாரி கருப்பண்ணன் குழந்தையப்பன் தலைமையேற்றார்.
மூத்த தீயணைப்பு அதிகாரி ராமச்சந்திரன் வெங்காடசலம் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த தீயணைப்பு அதிகாரி Superintendent 1 ஏழுமலை ரத்னம் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்