
தோக்யோ, மார்ச்-14 – சீனப்பெருஞ்சுவரில் தங்களின் பிட்டத்தைக் காட்டி புகைப்படம் எடுத்த 2 ஜப்பானிய சுற்றுப் பயணிகள் சீனாவில் இரண்டு வாரங்கள் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் நாடு கடத்தப்பட்டனர்.
பெய்ஜிங்கிற்கு அருகிலுள்ள அந்த உலக பாரம்பரியத் தளத்தில், தனது பிட்டத்தை ஆடவர் காட்ட, அதனை உடனிருந்த பெண் புகைப்படம் எடுத்துள்ளார்.
இருவரும் உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் உடனடியாகக் கைதுச் செய்யப்பட்டு, 2 வாரங்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டு, ஜனவரியில் தாயகம் திருப்பி அனுப்பட்டனர்.
அதை ஒரு குறும்புக்காகவே செய்ததாக ஜப்பானிய தூதரகத்திடம் அவர்கள் விளக்கம் கூறியுள்ளனர்.
சீனாவில், பொது இடத்தில் மற்றவர் கண்களுக்குத் தெரியும் வகையில் இடுப்புக்குக் கீழே காட்டுவது
சட்டத்திற்கு எதிரானதாகும்.