
புத்ராஜெயா, ஏப்ரல்-17, பிறை இல்லாத தேசியக் கொடியை facebook-கில் பதிவேற்றியதற்காக, Kwong Wah Yit Poh சீன நாளேட்டை உள்துறை அமைச்சான KDN விசாரித்து வருகிறது.
முழுமையற்ற தேசியக் கொடி நேற்றைய அதன் facebook பதிவில் இடம்பெற்றது குறித்து புகார் கிடைத்துள்ளது.
அதே புகார் தொடர்பில் முன்னதாக Sin Chew Daily நாளிதழ் மீது விசாரணைத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகையத் தவறுகள் எளிதாக எடுத்துக் கொள்ளப்படாது; மின்னியல் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென KDN திட்டவட்டமாகக் கூறியது.
இவ்வேளையில், தொடர்பு-பல்லூடக ஆணையமான MCMC-யும் தனி விசாரணை நடத்துகிறது.
Kwong Wah Yit Poh நிர்வாகத்தை விசாரணைக்கு அழைத்துள்ள MCMC, தேவைப்பட்டால் போலீஸுக்கும் KDN-னுக்கும் முழு ஒத்துழைப்புத் தர தயாராக இருப்பதாகக் கூறியது.
ஏப்ரல் 15-ஆம் தேதி தனது முதல் பக்கத்தில் வெளியிட்ட கார்ட்டூன் சித்திரத்தில் பிறை இல்லாத மலேசியக் கொடி இருந்ததால் Sin Chew Daily முதலில் சர்ச்சையில் சிக்கியது.
போலீஸிலிம் 13 புகார்கள் செய்யப்பட்டன.
அத்தவறு குறித்து வருத்தம் தெரிவித்து மன்னுப்புக் கோரிய Sin Chew Daily, சர்ச்சைக்குரிய படம் உடனடியாக மாற்றப்பட்டதாகக் கூறியிருந்தது.