
புத்ரா ஜெயா, மே 6 – புத்ரா ஜெயா Presint 17 மேம்பாலத்திற்கு அருகே நீர்த் தேக்க குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது மூழ்கி இறந்ததாக நம்பப்படும் 12 வயதுடைய சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. குளத்தில் அச்சிறுவனின் உடல் காணப்பட்டதாக நேற்று மாலை மணி 5.12 அளவில் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக புத்ரா ஜெயா போலீஸ் தலைவர் அய்டி ஷாம் ( Aidi Sham Mohamed ) தெரிவித்தார்.
அவ்வழியாக கடந்து சென்ற பொதுமக்கள் அச்சிறுவனின் உடலைக் கண்டு சிகிச்சைக்காக புத்ரா ஜெயா மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு கொண்டுச் சென்றனர். எனினும் அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அச்சிறுவன் இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். அச்சிறுவன் தனது இரண்டு நண்பர்களுடன் அந்த நீர்தேக்க குளத்தில் குளித்ததாக தொடக்கக் கட்ட விசாரணை மூலம் தெரியவருவதாக அய்டி ஷாம் கூறினார்