Latestமலேசியா

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து : பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு RM1,000 சிறப்பு உதவி

பூச்சோங், ஏப்ரல்-2 – பூச்சோங் புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு கல்வி அமைச்சு தலா 1,000 ரிங்கிட் சிறப்பு உதவியை வழங்கும்.

குறிப்பாக பாடப்புத்தகங்கள் போன்ற முக்கியமான பள்ளிப் பொருட்களை இழந்தவர்களுக்கு உதவுவதே இந்த உதவியின் நோக்கமாகும் என அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் கூறினார்.

இதில் பள்ளித் தேவைகளுக்கான கூடுதல் உதவியும் அடங்கும்.

சிலர் மொத்த இழப்பைச் சந்தித்துள்ளனர், அவர்களின் அனைத்து பள்ளிப் பொருட்களும் தீயில் அழிந்துப் போயுள்ளன.

இவ்வேளையில், புத்ரா ஹைட்ஸ் மசூதியில் உள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு ஆலோசகர்கள் மற்றும் கல்வி ஆதரவு குழுவை நியமிப்பது உட்பட, மாநில கல்வித் துறை கூடுதல் ஆதரவை வழங்கும் என ஃபாட்லீனா சொன்னார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் பள்ளிப் பொருட்கள் பற்றாக்குறை காரணமாக உடனடியாக பள்ளிக்குத் திரும்ப முடியாமல் போகலாம் என்பதையும் தம்மால் புரிந்துகொள்ள முடியுமென்றார் அவர்.

இதுவரை அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 102 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் மற்றும் அமைச்சின் ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மொத்த மாணவர்கள் சுற்று வட்டாரத்திலுள்ள 23 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அவர்களின் நல்வாழ்வுக்கு அமைச்சு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக, இன்று காலை அங்குள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு நேரில் வருகை மேற்கொண்ட போது அமைச்சர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!