Latestமலேசியா

புருணை சுல்தான் நலமுடன் உள்ளார்; IJN-னில் ஓய்வு

கோலாலம்பூர், மே-28 – ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்த புருணை சுல்தான், சுல்தான் ஹசானால் போல்கியா நலமுடன் உள்ளார்.

புருணை நாட்டின் பிரதமர் அலுவலகம் அதனை உறுதிப்படுத்தியது.

அவர் சற்று சோர்வடைந்திருப்பதால் மலேசிய மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின் பேரில், தேசிய இருதயக் கழகமான IJN-னில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சில நாட்கள் தங்கி அவர் ஓய்வெடுப்பார் என அவ்வறிக்கைத் தெரிவித்தது.

சுல்தான் ஹசானால் போல்கியா IJN-னில் அனுமதிக்கப்பட்டதை முன்னதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் உறுதிப்படுத்தினார்.

களைப்படைந்துள்ளதால் அவர் அங்கு ஓய்வெடுப்பதாக அன்வார் செய்தியாளர்களிடம் கூறினார்.

46-ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாடு, 2-ஆவது ஆசியான் – GCC எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் மாநாடு, முதலாவது ஆசியான் – GCC – சீனா உச்ச நிலை மாநாடுகளில் பங்கேற்பதற்காக, மற்ற ஆசியான் தலைவர்களோடு புருணை சுல்தானும் கோலாலம்பூரில் இருக்கின்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!