Latestமலேசியா

பூட்டில் பட்டாசு வைக்கப்பட்ட கார் லூமூட்டில் சாலையின் நடுவே தீப்பற்றியது

ஈப்போ, மார்ச்-30 – பேராக், லூமூட்டில் பூட் பகுதியில் ஹரி ராயா பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த கார் சாலையில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

லூமூட், புக்கிட் பெர்மாத்தாவில் பரபரப்புமிக்க சாலைச் சந்திப்பில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்ததாக, மஞ்சோங் போலீஸ் தலைவர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் கூறினார்.

24 வயது இளைஞர் ஓட்டிச் சென்ற Proton Gen-2 கார், தீ பிடிப்பதற்கு முன் திடீரென பழுதானது.

அப்போது காரின் இயந்திரத்தை முடுக்கி விட அவ்வாடவர் முயன்ற போது, பின்பக்க டயரிலிருந்து புகைக் கிளம்பி, அதைத் தொடர்ந்து தீ ஏற்பட்டதையும் கண்டு அதிர்ச்சியுற்றார்.

தகவல் கிடைத்து வந்து சேர்ந்த தீயணைப்பு-மீட்புப் படை தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

எவருக்கும் அதில் காயமேற்படவில்லை.

அச்சம்பவம் சமூக ஊடகங்களிலும் வைரலானது.

இந்நிலையில் மேற்கொண்டு விசாரிக்க, தகவல் தெரிந்த பொது மக்களின் உதவியை மஞ்சோங் போலீஸ் நாடியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!