
கோலாலம்பூர், ஏப்ரல்-19- கிராப் ஓட்டுநருக்கு நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று வைரலாகியுள்ளது.சிட்னி ராயோஸ் மைக்கல் (Sidney Rayos Michael) என்பவர் அன்பு மற்றும் மனிதாபிமானம் காப்பதால் எப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது என தனக்கு அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை, 4 மணி நேரங்களாக ஓட்டியும் வெறும் 35 ரிங்கிட் வருமானமே கிடைத்த விரக்தியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சிட்னி ராயஸ்க்கு சாலையோரமாக பழுதாகி நின்றுக்கொண்டிருந்த கார் கண்ணில் பட்டுள்ளது.
அதன் வலப்புற டயர் ஆணிக் குத்தி ஓட்டையாகியிருந்து; டயரை மாற்றலாமென்றால், அந்தக் காரோட்டி கைவசமுள்ள spare உபரி டயரில் காற்றில்லாததால் அந்த மலாய்க்கார ஆடவர் செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்தார்.
வேறு வழியின்று கிராப்பில் 30 கிலோ மீட்டர் அப்பால் இருக்கு வீட்டுக்கு திரும்பிவிட்டு நாளை காரை பழுதுபார்த்துக் கொள்ளலாம என நினைத்த அவருக்கு, முன்வந்து தன்னிடமிருந்த உபரி டயரை முதலில் பயன்படுத்திக் கொண்டு வீடு செல்லலாம், பிறகு டயரை மாற்றுக் கொள்ளலாம் என உதவியுள்ளார் சிட்னி ராயஸ்.
பின்னர் டயரை மாற்றி அந்த மலாய்க்கார நண்பர் வீடு வரை சென்ற இறுதிவரை நின்ற சிட்னி ராயஸ், கிளம்பும் தருணம், மிகவும் நெகிழ்ந்துபோன பாதிக்கப்பட்ட நபர் தனக்கு உதவிய சிட்னியின் கைகளை இறுகப் பற்றி உணர்ச்சிப் பொங்க நன்றிக் கூறினார்.
இதுவரை எத்தனையோ பேருக்கு உதவியுள்ளேன்; இது தான் முதன் முறை எனக்கு மற்றவர்கள் உதவிச் செய்வது எனக் கூறி அவர் நெகிழ்ந்துபோனார்.
இதனிடையே, இந்த அனுபவம் குறித்து காணொளி ஒன்று பதிவிட்ட சிட்னி, “உண்மையில் பாதிக்கப்பட்ட காரோட்டிக்குத்தான் நான் நன்றிக் கூற வேண்டும்; விரக்தியில் சென்ற என்னை அவருக்கு உதவ வைத்து அதன் மூலம் என் தலை பாரத்தைப் போக்கி அவர் மறைமுகமாக எனக்கு உதவியுள்ளார்; சக மனிதனுக்கு உதவிய திருப்தியை எனக்குக் கொடுத்துள்ளார்”;
“எனவே வாழ்க்கையில் பிரதிபலன் பார்க்காமல் எப்போதும் அன்பைப் பகிருவோம், மனிதம் வளர்ப்போம்” என சிட்னி தனது வீடியோவில் கூறியுள்ளார்.
தற்போது, இக்காணொளி வைரலாகி வரும் நிலையில், வலைத்தளவாசிகள் பலர் அவரை பாராட்டி வருவதோடு, இன்னும் சிலரோ மனிதம் காப்போம் அன்பை வெளிப்படுத்துவோம் என உற்சாக வார்த்தைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.