சென்னை , ஜன 10 – தமிழர்களுடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முதல் முறையாக மலேசியாவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்ததுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக இன்று இலங்கை மேனாள் ஆளுநர் செந்தில் தொண்டைமான், நடிகர் பிரசாந்த் மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குழுத் தலைவர்
திரு ஒண்டி ராஜா ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் இந்தப் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ம.இ.காவின் தேசிய துணைத்தலைவரும் , தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.