Latestமலேசியா

மே 31; மலேசிய கலைஞர்களை கெளரவிக்கும் யாசி விருது விழா 2025

கோலாலம்பூர், மே 9 – வருகின்ற மே 31ஆம் தேதி, HGH கன்வென்ஷன் சென்டரில், 2025-இன் ‘யாசி விருதுகள்’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது யாசியின் இரண்டாவது விருது விழாவாகும்.

இந்நிகழ்ச்சிக்கு, யாசி, மலேசிய இந்திய கலைஞர்கள் அரவாரியத்தின் அறங்காவலரும், ம.இ.கா-வின் தேசிய துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர்.எம்.சரவணன் தலைமையேற்கவுள்ளார்.

இதில் 2023 மற்றும் 2024-இல் வெளிவந்த, மலேசிய சினிமாத்துறை, உள்ளூர் தொலைக்காட்சி தயாரிப்புகள், வானொலி, மேடை, இசை, நாடக படைப்புகளென, மொத்தம் 48 விருதுகள் வழங்கப்படவுள்ளன. கௌரவ விருதுகளும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைப்பெற்ற நிலையில், இவ்விருது விழாவின் தீம் பாடலை டத்தோ ஶ்ரீ சரவணம் வெளியிட்டார்.

இதனிடையே, இந்த யாசி விருதளிப்பு விழாவில் முதல் முறையாக, 6 பிரிவுகளுக்கு பொது வாக்களிப்பின் முடிவுகள் மூலம் விருதுகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளன.

ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் வாக்கெடுப்பு செயல்முறை அமல்படுத்தப்படவுள்ளது. மே 30 வரை பொதுமக்கள் தங்களின் வாக்களிப்பை செலுத்தலாம் என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே, கல்வி சார்ந்த ஆதரவு, மலேசிய கலைஞர்களுக்கு பயிற்சிகள், சான்றிதழ்கள், மற்றும் திறன்களை வழங்குவது போன்றவற்றை தனது எதிர்கால திட்டங்களில் அடங்கும் என யாசி கூறியுள்ளது.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!