
லங்காவி, மார்ச் 13-லங்காவி , Kampung Padna Gaung கில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 27 பூனைகள் இறந்தன.
இந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சிக்கு உள்ளான வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். காலை 8.30 மணிக்கு நடந்த அந்த சம்பவத்தில் அக்கூண்டில் இருந்த அனைத்து பூனைகளும் இறந்து கிடந்தன, மேலும் மூன்று பூனைகள் மட்டுமே மீட்கப்பட்டன.
காயத்திற்குள்ளான ஒரு பெண்ணுக்கும் ஆடவருக்கும் தொடக்கக் கட்ட சிகிச்சை வழங்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக Sultanah Maliha மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக லங்காவி தீயணைப்பு மற்றும் மீட்புத் நிலையத்தின் அதிகாரி முகமட் ஷம்ரி அப்துல் கனி தெரிவித்தார்.



