
கோலாலம்பூர், ஜூன் 25 – இன்று அதிகாலை கிள்ளான் , Taman Chi Lung கில் , 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஓட்டிச் சென்ற கார் கவிழ்ந்ததில் உயிரிழந்தார்.
விபத்து குறித்து அதிகாலை மணி 3.17 அளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார்
( Ahmad Mukhlis Mukhtar ) கூறினார்.
Perodua Bezza கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததைத் தொடர்ந்து , காரின் அடியில் ஓட்டுநர் சிக்கிக் கொண்டார். தீயணைப்பு வீரர்கள் சிறப்பு சாதனங்களை பயன்படுத்தி காரில் அடியில் சிக்கிக்கொண்ட ஓட்டுநரை மீட்டனர். விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அவர் இறந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.