Latestமலேசியா

ஷா ஆலாமில் பொழுதுபோக்காய் ஆயுதங்களைச் சேகரித்த முதியவர் கைது

ஷா ஆலாம், ஏப்ரல் 24- கடந்த திங்கட்கிழமை, பல்வேறு வகையான ஆயுதங்களைச் சேகரித்த வைத்திருந்த முதியவர் ஒருவர், செரெண்டா அந்தாரா காபி (Antara Gapi, Serendah) பகுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஓய்வுபெற்ற தனியார் நிபுணரான 69 வயதுடைய அந்த உள்ளுர் சந்தேக நபர், பல வகையான துப்பாக்கிகள், பேட்டரிகள், 100 க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி உறைகள் அனைத்தையும் வைத்திருந்ததாக, சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.

இந்த சோதனையில், போலீசார் ஒரு ரிவால்வர், ஒரு CAL 22/5.5M ரைபிள், ஒரு CZ75 பிஸ்டல் மற்றும் நான்கு ஏர்சாஃப்ட் கார்களைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சந்தேக நபருக்குச் சொந்தமான இரண்டு வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்ததது குறிப்பிடத்தக்கது.

இதுவரை, போலீசார் ஐந்து பொது சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், விசாரணையில் உதவ இன்னும் பல சாட்சிகளை அழைப்பதாகவும் கூறினார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!