
கோலாலம்பூர், ஜூன் 30 – அண்மையில் கோலாலம்பூர் டான் ஸ்ரீ சோமா அரங்கில், 14 வயதான சாய் ஹரிந்த்திரன் எனும் சிறுவன் ஷிர்டி சாய்பாபாவுக்கான தனது முதல் பக்திப் பாடலான ஷிர்டி நாதரே எனும் பாடலை வெளியிட்டுள்ளார்.
மலேசியாவில் இளம் வயதான ஒருவர் பெரிய அளவில் ஒரு பக்திப் பாடல் வெளியிட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இளமை, ஆன்மீகம் மற்றும் இசைத் திறமையின் அற்புதமான கலவையை இந்தப் பாடல் வெளிப்படுத்தியிருந்தது.
இப்பாடல் சாய் ஹரீந்திரனே எழுதி பாடியுள்ளதோடு இது PU4LYF யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பாடலின் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங்கின் அரசியல் செயலாளரும் முன்னாள் செனட்டருமான சுரேஸ் சிங் சாய் ஹரிதிரனின் குரல் மற்றும் பாடல் வரிகளை வெகுவாக பாராட்டினார்.
இதனிடையே தனது இந்த பாடல் வெளியீட்டுக்கு பெரும் உறுதுணையாக இருந்த தனது பெற்றோர் மோகன் கணேசன் மற்றும் தெரசா paul ஆகியோருக்கு சாய் ஹரிதிரன் நன்றி தெரிவித்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் மற்றும் சாய் பாபா பக்தர்கள் சாய் ஹரிதிரனின் இந்த ‘ஷிர்டி நாதரே’ பாடலை கேட்டு மனம் நெகிழ்ந்தனர்.