
புது டெல்லி, ஜூன்-27 – இந்தியாவின் ஷுபான்ஷு க்ஷுக்லா உள்ளிட்ட நால்வரை ஏற்றிச் சென்ற Crew Dragon விண்கலம், 28 மணி நேர பயணங்களுக்குப் பிறகு ISS எனப்படும் அனைத்துலக விண்வெளி நிலையைத்தை வெற்றிகரமாக சென்றடைந்துள்ளது.
இதையடுத்து விண்வெளி நிலையத்தில் ‘மிதக்கும்’ முதல் இந்தியப் பிரஜையாக ஷுபான்ஷு வரலாறு படைத்துள்ளார்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு கனவில் இது ஒரு புதிய அத்தியமாகும்.
ஷுபான்ஷு உள்ளிட்ட நால்வரையும், ஏற்கனவே அங்குள்ள 7 விண்வெளி வீரர்கள் கட்டியணைத்தும் குளிர்பானங்கள் கொடுத்தும் வரவேற்றனர்.
பின்னர் உரையாற்றிய ஷுபான்ஷு, “இந்த விண்வெளிப் பயணம் ஒரு புதிய அனுபவம் என்பதோடு, அங்கிருந்து பூமியைப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு ஒரு பாக்கியம்” என்றார்.
அடுத்த 14 நாட்கள் தமக்கு மிகுந்த ஆச்சரியம் நிறைந்த நாட்களாக இருக்கும் என்றும் அவர் வருணித்தார்.
அமெரிக்காவின் Axiom Space தனியார் நிறுவனத்தின் Axiom 4 திட்டத்தின் கீழ் ஷுபான்ஷு சுக்லாவுடன், அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி நாட்டு விண்வெளி வீரர்கள் ISS சென்றடைந்துள்ளனர்.
விண்வெளியில் அவர்கள் 60 பரிசோதனைகளைச் செய்யவிருக்கின்றனர்.
அவற்றில் 7 ஆய்வுகளுக்கு ஷுபான்ஷு தலைமையேற்கிறார்