
காஜாங்க, ஏப்ரல்-10, சிலாங்கூர், காஜாங், பண்டார் தெக்னோலோஜி காஜாங்கில் உள்ள ஒரு வாகன உதிரிபாக தொழிற்சாலை இன்று காலை தீப்பிடித்து எரிந்தது.
அதில், தொழிற்சாலை, வளாகத்தின் 40 விழுக்காடு சேதமடைந்தது.
காலை 6 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததும், காஜாங் மற்றும் பாங்கி நிலையங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்டதாக, சிலாங்கூர் தீயணைப்பு – மீட்புத் துறை கூறியது.
17 தீயணைப்பு வீரர்கள் தீயணை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தீ ஒருவழியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அத்துறை உறுதிப்படுத்தியது.