
கோலாலம்பூர், மே-29 – கோலாலம்பூர், தாமான் டானாவ் கோத்தாவில் குழந்தைப் பராமரிப்பு மையத்தில் 7 மாதக் குழந்தை உயிரிழந்ததற்கு, தொண்டையில் உணவும் பாலும் அடைத்துக் கொண்டதே காரணமாகும்.
சவப்பரிசோதனையில் அது உறுதியாகியிருப்பதாக, வங்சா மாஜூ போலீஸ் துணைத் தலைவர் ஷாருல் அனுவார் அப்துல் வஹாப் அதனைத் தெரிவித்தார்.
கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் தடயவியல் பரிசோதனையில், குழந்தையின் சுவாசக் குழாய்யில் உணவும் பாலும் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து மூச்சடைத்து குழந்தை இறந்திருப்பதாக அச்சம்பவம் வகைப்படுத்துள்ளது.
என்ற போதிலும், கவனக்குறைவு, கைவிடப்பட்டது போன்ற கோணங்களில், 2001 சிறார் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுவதாக ஷாருல் அனுவார் கூறினார்.
திங்கட்கிழமை காலை அந்த பராமரிப்பு மையத்தில் பேச்சு மூன்றின்றி கிடந்த Muammar Adli, காலை 11.08 மணிக்கு உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து குழந்தையின் தந்தை அன்று பிற்பகலிலேயே போலீசில் புகார் செய்ததை அடுத்து அச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இவ்வேளையில், அப்பராமரிப்பு மையத்திற்கு முறையான உரிமம் இருப்பதை உறுதிச் செய்த சமூக நலத் துறை, நடந்த சம்பவம் குறித்து தங்கள் தரப்பிலும் விரிவான விசாரணை நடத்தப்படுமென்றது.