
கங்கார், மே-15 – பெர்லிஸில் ஆகஸ்ட் 1 முதல் மின்னியல் சிகரெட் அல்லது வேப் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேப் புகைக்கும் பழக்கம் இளையோர் மத்தியில் தீங்கு விளைவிப்பதைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலம் முழுவதும் சுமார் 50 வேப் கடைகளை இத்தடை உட்படுத்தியிருக்கும் என, மந்திரி பெசார் மொஹமட் ஷுக்ரி ரம்லி தெரிவித்தார்.
தடை அமுலுக்கு வர சுமார் 3 மாதங்கள் இருப்பதால், வேப் கடை நடத்துநர்கள் இப்போதே வேறு வியாபாரத்திற்கு மாற தயாராகுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
பொருத்தமான வியாபாரத்தைத் தேர்ந்தெடுக்க மாநில அரசு அவர்களுக்கு போதிய ஆதரவை வழங்குமென்றார் அவர்.
வேப் புகைப்பதை தேசிய ஃபாத்வா மன்றம் ‘ஹராமாக’ வகைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.