Latestமலேசியா

ஆசியான் மாநாடு; 1000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமனம்- KLCC

கோலாலம்பூர், மே 24- வருகின்ற, மே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் 46வது ஆசியான் மாநாட்டை முன்னிட்டு. பழுது பார்க்கும் பணிகளை விரைவுப்படுத்துவதற்காகவும் நிகழ்வு ஏற்பாடுகளை சிறப்புற செய்வதற்கும், கோலாலும்பூர் மாநாட்டு மையம் (KLCC), 1,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்துள்ளது என்று துணைப் மேலாளர் ராபர்ட் ஹாட்டன்-ஜோன்ஸ் ( Robert Hatton-Jones) கூறியுள்ளார்.

நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு, ஆடியோ-விஷுவல் அமைப்புகள், உபகரணங்கள் மற்றும் உட்புற வடிவமைப்பு ஆகியவைகளை மேம்படுத்தி வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

மாநாட்டின் போது, பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த மலேசியா காவல்துறை (PDRM) மற்றும் தேசிய பாதுகாப்பு ஆணையத்தோடு (MKN) இணைந்து செயல்பட்டு வருவதாக KLCC நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

‘உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை’ என்ற கருப்பொருளில் நடைபெறும் ஆசியான் மாநாடு, எந்தவித தங்கு தடையுமின்றி சிறப்புற நடைபெற KLCC தனது முழு ஒத்துழைப்பை வழங்கும் என்பதில் திட்டவட்டமாக உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!