
கோலாலம்பூர், ஜூன் 26 – 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 5G பயனர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு, அல்லது 2.9 பில்லியனை எட்டுமென்று என்று தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனமான எரிக்சன் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு Pengguna 5G dijangka cecah 2.9 bilion menjelang akhir tahun 2025
இறுதியில் 5G பயனர்களின் எண்ணிக்கை 35 சதவீதத்தை எட்டியது என்றும், 2030 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 80 சதவீதத்தைத் தாண்டும் என்றும் கணிப்புகள் காட்டுகின்றன.
இதற்கிடையில், பயனர்கள் 5G க்கு மாறியதால், உலகளவில் 4G சந்தாக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும், 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 55 மில்லியன் குறைந்து, மொத்த எண்ணிக்கை 4.9 பில்லியனுக்கும் குறைவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆசியானில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் மலேசியா ஏற்கனவே முன்னணியில் உள்ளதென்றும், 5G டிஜிட்டல் உள்கட்டமைப்பு உலகளாவிய முதலீடு மற்றும் புதுமைகளுக்கு உகந்தது என்றும் அறியப்படுகின்றது.