
சிச்சிபோல், மே-18- நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து இந்தியாவின் மும்பை புறப்பட்ட விமானத்தின் இயந்திரத்தில் தீ பிடித்ததால், புறப்பட்ட இடத்திற்கே விமானம் திரும்பியது.
KL877 எனும் அவ்விமானம் உள்ளூர் நேரப்படி நேற்று நண்பகல் 12 மணிக்கு சிச்சிபோல் விமான நிலையத்திலிருந்து மும்பை புறப்பட்டது.
எனினும் இடப்பக்க இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், வானில் 2,000 மீட்டர் உயரத்தில் விமானம் பிரச்னையை எதிர்நோக்கியது.
இதனால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க, அந்த போயிங் விமானம் எரிபொருளை நீக்கி விட்டு சிச்சிபோல் விமான நிலையத்திற்கே திரும்பி பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
அங்கு தயாராக இருந்த தீயணைப்புப் படையினர் விரைந்து தீயை அணைத்தனர்.
முன்னதாக விமானம் புறப்படும் போது அதன் இயந்திரத்தில் தீப்பொறி கிளம்பி அதன் வீடியோக்கள் வைரலாகின.