
அகமதாபாத் – இந்தியா, மே 27 – கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட, ஐந்து ஆண்டுகளின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் அதுகரித்து, அதன் எண்ணிக்கை 891 ஆக உயர்ந்துள்ளது.
1995-இல் 304 ஆக இருந்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை, 2020-இல் 674-காக உயர்ந்து, தற்போது அதன் எண்ணிக்கை 891-ஆக அதிகதித்துள்ளதென்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்த அதிகரிப்பு வெற்றிகரமான பாதுகாப்புத் திட்டம் ஒரு காரணம் என்றாலும், மற்றொரு புறம், மரபணு இனப்பெருக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளதென்று பாதுகாப்பு அமைப்பான WWF எச்சரித்து வருகின்றது.
மேலும், சிங்கங்களின் அதிகரிப்பு, இந்திய சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டாலும், அவை ஒரே இன ஆசிய சிங்கங்களாக இருப்பதால் தொற்றுநோய் அபாயங்களும் அதிகமுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வுகளைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு, தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல் அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.