
பெட்டாலிங் ஜெயா, மே 16 – நாடு முழுவதும் மின் சிகரெட்டுகளை (vape) தடை செய்ய, மலேசிய மருத்துவ சங்கம் (MMA) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
அந்த வகையில் மின் சிகரெட்டுகளினால் ஏற்படும் நோய்கள் ஆபத்தானவைகள் என்பதும், அதனை நிவர்த்தி செய்வதற்கான சிகிச்சை செலவுகளும் அதிகம் எனவும் MMA தலைவர் டாக்டர் கல்விந்தர் சிங் கைரா கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை, வேப்ஸ் விற்பனைக்கு முழு தடையை விதித்த பெர்லிஸ், ஜோகூர், கிளந்தான் மற்றும் தெரெங்கானு ஆகிய மாநிலங்களின் செயல்கள் பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மலாயாப் பல்கலைக்கழக இந்திய பட்டதாரிகள் சங்கமான CUMIG, இளைஞர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு வேப்ஸ் விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்ற விண்ணப்பத்தை அரசாங்கத்தின் முன் வைத்துள்ளது.
அதோடு, இளைஞர்களைத் தாண்டி, தற்போது ஆரம்பப்பள்ளி மாணவர்கள் வரை இந்த வேப் பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பது கவலையளிப்பதாகவும் CUMIG கூறியுள்ளது.