
ஈப்போ, மே 20 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 366ஆவது கிலோமீட்டரில் Sungai – Slim River க்கிடையே நேற்றிரவு 10.30 மணியளவில் பல்வேறு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, நால்வர் காயம் அடைந்தனர். ஈப்போ, சிம்பாங் பூலாய்யிலிருந்து சுண்ணாப்பு கற்களை ஏற்றிச் சென்ற டிரெய்லர் லோரியின் ஓட்டுனர் இந்த விபத்தில் இறந்தது அடையாளம் காணப்பட்டதாக Mualim மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் துணை Superintendan சுஹாய்மி முகமட் ( Suhaimi Muhamad) தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த மீட்புப் பணி குழுவினர் வாகனத்தில் சிக்கிக் கொண்ட ஆடவரின் உடலை மீட்டனர். சொற்ப அளவில் காயம் அடைந்த நால்வருக்கு விபத்து நிகழ்ந்த இடத்திலேயே சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த விபத்திற்காக காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுஹாய்மி கூறினார்.