Latestமலேசியா

வாகன நுழைவு அனுமதியில்லாத சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

ஜோகூர் பாரு, ஜூன் 5 – தேவையற்ற நெரிசலைத் தடுக்கும் முயற்சியாக, VEP எனப்படும் செல்லுபடியாகும் வாகன நுழைவு அனுமதி இல்லாத சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஜோகூரில் உள்ள சோதனைச் சாவடிகளில் திருப்பி அனுப்பப்படாது என்று மாநில சாலைப் போக்குவரத்துத் துறை (RTD) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகன ஓட்டிகள், கட்டாய VEP டேக் இல்லாவிட்டாலும், பங்குனான் சுல்தான் இஸ்கந்தர் மற்றும் கொம்ப்ளெக்ஸ் சுல்தான் அபு பக்கர் (KSAB) ஆகிய இரு தரை வழி சோதனைச் சாவடிகள் வழியாகச் செல்ல அமலாக்க அதிகாரிகள் அனுமதிப்பார்கள் என்று அதன் இயக்குநர் அஸ்மில் ஜைனல் அட்னான் ( Azmil Zailnal Adnan ) தெரிவித்தார்.

சுங்க, குடிநுழைவு , மற்றும் தனிமைப்படுத்தல் வளாகத்தில் வாகன ஓட்டிகள் நிறுத்தப்படவோ அல்லது திருப்பி அனுப்பப்படவோ மாட்டார்கள், ஏனெனில் அவ்வாறு செய்வது போக்குவரத்தை கடுமையாக பாதிக்கும். அதே வேளையில் VEP டேக் இல்லாத வாகனங்கள் நிறுத்தப்பட்டு அதன் ஓட்டுநர்களுக்கு
300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அபராதத் தொகையை செலுத்திவிடவேண்டும். கூடுதல் நெரிசலைத் தவிர்க்க, , BSI மற்றும் KSAB வெளியேறும் இடங்களிலிருந்து தொலைவில் அபராத கட்டண முகப்பிடங்களை சாலை போக்குவரத்துத்துறை அமைக்கும் என்றும், இதனால் சிங்கப்பூரர்கள் குடியரசுக்குத் திரும்புவதற்கு முன்பு தங்கள் அபராதங்களைச் செலுத்த முடியும் என்றும் அவர் கூறினார். இந்த முடிவு அமலாக்கத்திற்கும் நடைமுறைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அஸ்மில் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!